2026/04/19

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: நேரம், பாதிப்பு, உயிரிழப்புகள், காரணம் & பாதுகாப்பு விழிப்புணர்வு – முழு விவரம்

    April 19, 2026 By [Selvarani M] 

            தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், குறிப்பாக சிவகாசி பகுதி, இந்தியாவின் மிகப்பெரிய பட்டாசு உற்பத்தி மையமாக அறியப்படுகிறது. இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான பட்டாசு ஆலைகள் இயங்கி, நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கும் பட்டாசுகள் விநியோகிக்கப்படுகின்றன.  பட்டாசு ஆலை என்பது வெடிபொருட்கள் மற்றும் ரசாயன கலவைகள் பயன்படுத்தி தீப்பொறி, சத்தம் மற்றும் வண்ண விளைவுகளை உருவாக்கும் பட்டாசுகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஆகும். இதில்  ரசாயன கலவைகள் தயாரித்தல், பட்டாசு வடிவமைத்தல், உலர்த்துதல் மற்றும் சேமித்தல்போன்ற பல கட்டங்கள் உள்ளன. தீ பாதுகாப்பு குறிப்புகள்  பட்டாசு தயாரிப்பில் பல நுட்பமான செயல்முறைகள் உள்ளன.  ரசாயன கலவை தயாரித்தல்கந்தகம், நைட்ரேட் போன்ற பொருட்கள் கலக்கப்படுகின்றன, கைக்கூலி வேலைதொழிலாளர்கள் கைகளால் பட்டாசு உருவாக்குகின்றனர்.  உலர்த்துதல்வெப்பநிலையில் உலர்த்தப்படுகிறது. பேக்கிங் & விநியோகம்.  இந்த தொழிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் கிராமப்புற பெண்கள், தினக்கூலி தொழிலாளர்கள்,,இந்தத் துறையை நம்பி வாழ்கின்றனர்.

விபத்து நடைபெற்ற நேரம் & சம்பவ விவரம்

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் பகீர் பின்னணி தெரியவந்துள்ளது. மேலும், தீயணைப்பு அதிகாரியும் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.  விருதுநகர் மாவட்டம், கட்டனார்பட்டியில் முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இவ்வளவு கொடூரமான பட்டாசு ஆலை விபத்து விருதுநகரில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பாதிப்பு & உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

1.   இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். சிலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் பலர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

2.பெரும்பாலானோர் தினக்கூலி தொழிலாளர்கள் என்பதால் குடும்பங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  

3.      இந்த ஆலையில் அந்த பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் ஈடுபட்டிருந்தனர்.

4.      இந்த நிலையில், இன்று ஏப்ரல் 19- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் முதலில் 3 பேர் உயிரிழந்திருந்தனர். இதைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 6- ஆகவும், 9- ஆகவும், 14- ஆகவும், 19- ஆகவும், 22- ஆகவும் என அடுத்தடுத்து உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது

விபத்திற்கான காரணங்கள் & எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்

முக்கிய காரணங்கள்:

A.     பட்டாசு ஆலையில் வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

B.     இதனிடையே, விருதுநகர் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் பணியாளர்கள் குழுவாக அமைக்கப்பட்டு தினம்தோறும் ஒவ்வொரு பட்டாசு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

A. ’தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை’ தீயணைப்பு துறை உடனடி நடவடிக்கை,

B.     காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சை, அரசு நிவாரண தொகை அறிவிப்பு, தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு எதிராக விசாரணை. 

C.    இதனிடையே, விருதுநகர் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், விருதுநகர் மாவட்டத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் பணியாளர்கள் குழுவாக அமைக்கப்பட்டு தினம்தோறும் ஒவ்வொரு பட்டாசு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்

 தீ விபத்துபட்டாசு பாதுகாப்பு விழிப்புணர்வு

பட்டாசு தொழில் மிகவும் அபாயகரமானது. அதனால் பாதுகாப்பு உபகரணங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு சரியான பயிற்சி அளிக்க வேண்டும், வெடிபொருட்களை பாதுகாப்பாக சேமிக்க வேண்டும் , அவசர நிலை திட்டம் (Emergency Plan) இருக்க வேண்டும் . மேலும், தீ விபத்து மற்றும் பட்டாசு விபத்தை முன்னதாகவே கண்டறிந்து தடுப்பது எப்படி. விபத்துக்கு பின்னர் சமயோசிதமாக செயல்படுவது எப்படி என்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பொதுவாக பட்டாசு ஆலையில் காலை 11 மணிக்கு முன்னதாகவே அதாவது மதியம் வெயில் வருவதற்கு முன்னதாகவே வெடி பொருள்களுக்கு மருந்து வைக்கும் பணிகளை தொழிலாளர்கள் முடித்திருக்க வேண்டும்ஏனென்றால் மதிய வெயில் நேரத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால் பட்டாசுகள் எளிதில் வெப்பமடைந்து வெடி விபத்து  நிகழ்ந்து விடும் என்பதற்காகவே. அதன் பின்னர் மற்ற பணிகளில் ஈடுபட வேண்டும். பாதுகாப்பு தான் உயிர் காப்பாற்றும் முக்கிய கருவி.  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்’

இந்த பட்டாசு ஆலையில் எந்த நடைமுறையில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுவாக பட்டாசு ஆலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இந்த பட்டாசு ஆலை செயல்பட்டுள்ளது. இந்த பட்டாசு ஆலைக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஒருமுறை இந்த ஆலைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு பின்னர் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

“இந்தியத் தொழில்துறை பாதுகாப்பு விதிகள்விருதுநகர் போன்ற பகுதிகளில் பட்டாசு தொழில் முக்கியமானது என்றாலும், மனித உயிர் பாதுகாப்பே முதன்மை. பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக பின்பற்றினால் இப்படிப்பட்ட விபத்துகளை குறைக்க முடியும். பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிக்காதது பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கிறது. முன்கூட்டியே பாதுகாப்புபின்னர் பாதுகாப்பு அல்ல  என்பது இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது


CTA  Ideas

  • இந்த தகவலை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்
  • பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்புங்கள்
  • மேலும் இதுபோன்ற செய்திகள் அறிய Subscribe செய்யுங்கள்
  • உங்கள் கருத்துகளை கீழே பதிவு செய்யுங்கள்

No comments:

All Posts

ஈரான் தாக்குதல்: 2 இந்தியக் கப்பல்கள் சேதம் – ஹார்முஸ் நீரிணை மூடல் அச்சுறுத்தல் & உலக வர்த்தக பாதிப்பு

   April 19, 2026 By [Selvarani M]  ஏப்ரல் 18, 2026) அன்று காலை , அமெரிக்க கடற்படை ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள நிலையில் , ஹோர...

All Posts